பிறப்பு: 28.02.1921
இறப்பு : 18.11.1982
சொந்த ஊர்: தேவங்குடி
புனைப்பெயர்: தி.ஜா
சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர். இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர் தி.ஜா. பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, பின்பு அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன், 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இயற்கை எய்தினார்.