‘மூன்று ஆண்டுகள்’ கதை பூரணத்துவம் அடையாத காதலை வருணிக்கிறது. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் (1860-1904) 1895ஆம் ஆண்டில் இந்தக் கதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்புக்களில் ஒன்றாகும். டாக்டரின் மகளான யூலியாவுக்கும் அலெக்ஸேய் லாப்தேவ் என்ற கோடீசுவர வணிகருக்கும் திருமணம் நடைபெறுகிறது. அது காதல் திருமணம் அல்ல. பாழான பணத்துக்காக நடந்த திருமணமும் அல்ல. லாப்தேவ் தன் இளம் மனைவியுடன் மாஸ்கோவுக்குப் போய் மூன்று வருடங்கள்தான் முடிந்திருக்கின்றன. ஆனால் இந்தக் குறுகிய காலத்துக்குள் லாப்தேவின் மனதில், தன் மனைவி யோடும் தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களோடும் அவருடைய உறவுகளில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆசிரியர் இந்தக் கதைக்குக் ‘குடும்ப வாழ்க்கைக் காட்சிகள்’ என்று துணைத் தலைப்புக் கொடுக்க விரும்பினார். ஆனால் ‘மூன்று ஆண்டுகள்’ என்ற இந்தக் கதை இன்னும் விரிவான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. வலிமையான, இனிமையான மக்களைப் பற்றி, ஆனந்தமான, சுதந்திரமான காதலைப் பற்றி அந்தோன் சேகவின் அழியாக் கற்பனை இக்கதையில் பிரதிபலிக்கிறது.
மூன்று ஆண்டுகள்
₹150.00 Original price was: ₹150.00.₹112.00Current price is: ₹112.00.
SKU: c20ad4d76fe9
Category: நாவல்
Tags: 2019, NOVEL, OFFER, அ.கிருஷ்ணமூர்த்தி, அந்தோன் சேகவ், மொழிபெயர்ப்பு‘, ருஷ்ய படைப்புகள்
| Pages | 160 |
|---|
Related products
Sale!
Sale!
சிறார் நூல்கள்
₹200.00
முழுத் தொகுப்பு
₹130.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹200.00
முழுத் தொகுப்பு
₹190.00
Sale!


