“ப. நடராஜன் பாரதிதாஸ் கவிதைகள் சமூகத்தின் மீது வெற்றுக்கோபமோ, வெறுப்புகளாகவோ வார்த்தைகளால் கோக்கப்பட்ட ஜாலவித்தைகளோ இல்லை. கூர் ஈட்டியில் குருதியைத் தொட்டு எழுதப்பட்டவைகளாக உள்ளன. ஒன்றைத் தேடும்போது எதுவும் இல்லையென்றால் மயிருமில்லை மத்தாங்காயமும் இல்லையென்பார்கள். இவரது கவிதைத் தொகுப்பில் இரண்டும் இருக்கிறது.
இரா. முத்துநாகு”
Sale!
ஒரு சகலகலா கவரக்காரன் பராக் பராக்
Original price was: ₹100.00.₹80.00Current price is: ₹80.00.
ஒவ்வொரு கவிதையும்,தொட்டால் பல கதைகள் விரிந்துகொண்டே இருக்கும் உள் மடிப்புகளைக் கொண்டதாகவும் அதே சமயம் எளிய தோற்றத்துடன் வாசிப்பில் சட்டென எரியும் கற்பூரமாகவும் பிரகாசிப்பது இத்தொகுப்பின் சிறப்பு. இந்தக் கவிதைகளினூடே தமிழர் சடங்கு சம்பிரதாய முறைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ஒவ்விரு சடங்கிலும் சாதிய ஒடுக்குமுறைகளின் அவலம் நம்மை யோசிக்க வைக்கிறது. – அஜயன் பாலாஇரா. முத்துநாகு
Out of stock


