2001ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கொடைக்கானலில் இந்துஸ்தான் லிவருக்குச் சொந்தமான வெப்பமானித் தொழிற்சாலை தேசிய அளவில் தலைப்புச் செய்தியாக ஆனது. உள்ளூர் கழிவுப்பொருள் கிட்டங்கியில் பெரிய அளவில் பாதரச வெப்பமானியின் உடைந்த துண்டுகள் கொட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பன்னாட்டு நிறுவனம் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ள ஒன்றுக்குப் பின் ஒன்றாக அவசர அவசரமாக உள்மதிப்பீடு நடத்தியது. ஆனால் மாநில அலுவலர்கள் நஞ்சு கலந்த கழிவுப்பொருள்களை அகற்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறைகளை அது பின்பற்றவில்லை என்றும், இதனால் அது தொழிலாளர்களின் உடல் நலத்திற்கும், அப்பகுதியின் மென்மையான இயற்கைச் சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் கண்டுபிடித்தார்கள்.
பெரும் தொழில்கூடங்களின் கவனமின்மையாலும், அவை செய்யவேண்டியதைச் செய்யாமல் செய்யக்கூடாததைச் செய்ததாலும் ஏற்படுத்திய மிகப்பெரிய தொழிற்சாலை சார்ந்த ஒரு பேரவலத்தைக் கடுமையாக எடுத்துக் காட்டும் நூல் இது.




Reviews
There are no reviews yet.