இந்நூல் தொல்பழங்குடிகளான சமவெளி வாழ் இருளர்களின் பண்பாடு, கலாச்சாரம் பற்றியும். இருளர்களின் வாய்மொழித் தொன்மக் கதைகள், நம்பிக்கைகள், கன்னித் தெய்வம். முன்னோர் வழிபாடு, மருத்துவ முறை, வேட்டை நுண்ணறிவுப் பற்றியும் மானிடவியல் நோக்கில் விவரிக்கிறது.
இதனுடன் இருளர்கள் சமகாலத்தில் எதிர்கொள்ளும் வாழ்வியல் நெருக்கடிகள் குறித்தும் பேசுகிறது.
இருளர் பழங்குடிகளைப் பற்றிய இந்த நூல் அம்மக்கள் மீதான மதிப்பை பல மடங்கு உயர்த்துகிறது. ஒரு நூலின் ஆகச்சிறந்த பங்களிப்பு இது என நான் உணர்கின்றேன். ஹேமமாலினி அவர்கள் முறைப்படி பெற்றிருக்கும் மானிடவியல் பயிற்சியும். நெடிய கள ஆய்வு அனுபவமும் இந்த நூலைத் தனிச் சிறப்பு மிக்கதாக்கியுள்ளது. இந்த நூல் பழங்குடிகள் ஆய்வுக்கும், தமிழ் மானிடவியல் புலத்திற்கும் அருங்கொடை
- மானிடவியலாளர் ஆ. செல்லபெருமாள்




Reviews
There are no reviews yet.